ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 24 நாட்களாக நீடித்து வரும் போரில், ஈரானிய ராணுவம் ஒரு வினோதமான உத்தியைக் கையாண்டு வருகிறது. அமெரிக்கா தனது கடற்படை மற்றும் விமானத் தளங்களை ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தக் கேட்டபோது, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதனைப் பாராட்டும் விதமாக, “இந்தப் போர் சட்டவிரோதமானது மற்றும் மனிதநேயமற்றது” என்ற ஸ்பெயின் பிரதமரின் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஏவுகணைகளில் ஒட்டி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வரும் சூழலில், ஸ்பெயினின் இந்த துணிச்சலான முடிவை ஈரான் தனது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறது. ஸ்பெயின் பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய இந்த ஏவுகணைத் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த காரணத்திற்காக ஸ்பெயினுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது சர்வதேச அளவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
