அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குஜராத் நோக்கி வந்த சரக்கு கப்பல் உட்பட இரண்டு இந்திய கப்பல்களை ஈரான் தாக்கி சிறைபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றுடன் மூன்றாவது கப்பல் ஒன்று ஈரான் கடற்கரைக்கு அருகில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான ஈரானிய தூதரை நேரில் வரவழைத்த மத்திய அரசு, இச்சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கவலைகளையும் கண்டனத்தையும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. ஈரானின் இந்தத் தாக்குதலால் பிராந்தியத்தில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியக் கப்பல்களையும் அதில் உள்ள பணியாளர்களையும் மீட்பதற்கான தீவிர தூதரக முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
