ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாடு அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கி வருவதுடன் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியுள்ளது. இதற்குப் பதிலடியாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், தங்கள் நாட்டின் மின் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டால், அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் அண்டை நாடுகளின் மின் நிலையங்களையும் குறிவைப்போம் என அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் புரட்சிகர காவலர் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் மின் நிலையங்கள் மற்றும் அமெரிக்கர்களுக்குச் சொந்தமான பொருளாதார உள்கட்டமைப்புகளும் தங்களின் தாக்குதல் வளையத்திற்குள் வரும் எனத் தெளிவாகக் கூறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், இரு நாடுகளும் மின் நிலையங்களை அழிப்போம் என மாறி மாறி எச்சரிப்பது உலகப்போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் தனது முடிவில் பின்வாங்கப் போவதில்லை என்பதையும் மிக உறுதியாகப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…
அதிமுகவின் உள்கட்சிப் பூசல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான 'நமது அம்மா'…
குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், ஏசி-யை ஆன் செய்தபோது அதிலிருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி…
அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்கள் சிலரை ஆசிரியர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஜய், தேர்தல் விதிமுறைகளின்படி தனது…