“எங்க இப்போ கை வை பார்க்கலாம்”… ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரானின் ‘கடல் புலி’ காலி… உலக நாடுகளை அதிரவைத்த இஸ்ரேல்…!

Spread the love

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதாகக் கருதப்படும் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) மிக முக்கியப் பொறுப்பில் இருந்த டங்சிரி, பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்கு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் இந்தப் போரில், இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானின் ராணுவக் கட்டமைப்பிற்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி போக்குவரத்தில் முதுகெலும்பாகத் திகழும் ஒரு முக்கியப் பாதையாகும். டங்சிரியின் தலைமையின்கீழ் இந்தப் பாதையை ஈரான் முடக்கியதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது டங்சிரி கொல்லப்பட்டதன் மூலம், அந்தப் பகுதியில் ஈரானின் ஆதிக்கம் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஈரான் தரப்பு இந்த மரணத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அலிரேசா டங்சிரி ஒரு சாதாரண அதிகாரி அல்ல; அவர் ஈரான்-ஈராக் போர் மற்றும் 1980களில் அமெரிக்காவுடன் நடந்த “டேங்கர் போர்களில்” பங்கேற்ற அனுபவம் மிக்கவர். 2018 முதல் ஈரானின் கடற்படைத் தளபதியாகப் பணியாற்றி வந்த இவர், ஈரானின் கடல்சார் தற்காப்பு மற்றும் தாக்குதல் உத்திகளை வகுப்பதில் முதன்மையானவராக இருந்தார். முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், டங்சிரியின் மரணம் ஈரானின் எஞ்சியிருக்கும் ராணுவ பலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயன்றாலும், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஈரானின் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுவது போரின் போக்கை மாற்றும் என்று கணிக்கப்பட்டாலும், ஈரான் பின்வாங்கத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. இழந்தவற்றை மீட்டெடுக்க ஈரான் தீவிரமாகப் பதிலடி கொடுக்க முயல்வதால், மத்திய கிழக்கில் பதற்றம் தணிவதற்குப் பதில் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் அமைதிக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago