கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த விபத்தில் இருந்து உயிர் தப்பிய சிறுமி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், கீழே விழுந்தோம், அதைக் கூட பார்க்காம மேல ஏறிப் போனாங்க. மூச்சே விட முடியல. என்ன ஒரு அண்ணா தான் வந்து காப்பாத்தி எங்க வீட்ல கொண்டுவந்து விட்டாங்க. இல்லனா நானும் இணைக்கு செத்துட்டேன்னு நியூஸ்ல வந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.
