வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகின்றார். விரைவில் தண்டனை என்னவென்று தெரியவரும். ஹசீனா ஆட்சியில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க அவர் கடும் வன்முறையை கையாண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹசீனா மற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
