தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளில், பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகருக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி, அவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனத் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். மேலும், முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற அரசியல் நாகரீகம், அவையிலும் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தனது உரையில் ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்த உதயநிதி, தானும் தற்போதைய முதலமைச்சர் விஜய்யும் ஒரே கல்லூரியில் (லோயோலா கல்லூரி) பயின்றவர்கள் எனக் குறிப்பிட்டார். இருப்பினும், அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் ‘சீனியர் பேட்ச்’ என்று குறிப்பிட்ட அவர், தங்களின் நீண்டகால அரசியல் அனுபவத்தைப் புதிய அரசுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தமிழக நலனுக்காக இதனை அரசு ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், ஆளும் கட்சிக்கு மக்கள் பெரும்பான்மை வழங்காத நிலையிலும், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி, திமுக ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என உறுதியளித்தார். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் மற்றும் சனாதன ஒழிப்பு குறித்துத் தனது கருத்துக்களைப் பதிவு செய்த அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களது கட்சி எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…