#image_title
தேதிமுக கட்சியின் தலைவரும், நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான விஜயகாந்த் இன்று தனது 71 வயதில் மரணம் அடைந்துள்ளார். இவரின் இழப்பு ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமல்லாமல், ரசிகர்களையும், தொண்டர்களையும் இன்று சோக கடலில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பல வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது கணவரை மிகவும் கவனமாக கவனித்து வந்தார்.
நடிகர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவின் மீது அதிகம் காதல் கொண்டவர். பிரேமலதாவும் அப்படி தான். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்பொழுது இவர்களது திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல் தான் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி 1990 ல் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னரே நடிகர் விஜயகாந்தின் தீவிர ரசிகையாம் பிரேமலதா.
விஜயகாந்த் வீட்டிலிருந்து பிரேமலதாவை பெண் பார்க்க வருவதாக கூறியதும் அவருக்கு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் விஜய்காந்த் காலில் செருப்பு கூட போடாமல், கழுத்தில் ருத்ராட்ச மாலை, காவி வேட்டி அணிந்து மிகவும் எளிமையாக பெண்பார்க்க வந்துள்ளார். இதனைப் பார்த்த பிரேமலதாவின் பெற்றோருக்கும் பிரேமலதாவிற்கும் அவரை உடனே பிடித்துப் போனால் திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டார்களாம்.
நடிகர் விஜயகாந்த் பிரேமலதா தம்பதியின் திருமணத்தை கலைஞர் கருணாநிதி நடத்தி வைத்துள்ளார். மேலும் நடிகர் விஜயகாந்த் திருமணத்திற்கு பின்னர் வந்த தனது மனைவியின் முதல் பிறந்தநாளுக்கு’ வி என்ற எழுத்துடன் கூடிய டாலர்’ ஒன்றை பரிசாக அளித்து இருந்தாராம். அதனை தற்பொழுது வரை பொக்கிஷமாக வைத்து பாதுகாத்து வருவதாக பேட்டி ஒன்றில் பிரேமலதா கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது உயிராக நினைத்த காதல் கணவரை புரிந்துள்ளார். அவருக்கு ரசிகர்களும் தொண்டர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…
எதிர்காலப் பிரதமர் விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளன.…
தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் சமீபத்திய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, மதிமுக பொருளாளர் மு. செந்திலதிபன் காரசாரமான கண்டன அறிக்கை…
மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…
"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…