திக் திக் வீடியோ..! பாதுகாப்பு கயிற்றை மாட்ட மறந்த பயிற்றுவிப்பாளர்கள்… 40 மீட்டர் உயரத்திலிருந்து தூக்கிவீசப்பட்ட 21 வயது பெண் கொடூர மரணம்.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

Spread the love

பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள லிமேரா பகுதியில், “எலும்புக்கூடு பாலம்” என்று அழைக்கப்படும் கைவிடப்பட்ட பாலத்தில் இருந்து 40 மீட்டர் உயரத்தில் குதித்த மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ப்ரீடாஸ் என்ற 21 வயது இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ‘என்ட்ரே கோர்டாஸ்’ என்ற சாகச நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர்கள், அவரை “சூப்பர்மேன்” நிலைக்கு உயர்த்தி, கயிற்றின் உதவியோடு கீழே குதிக்க வைத்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது பாதுகாப்பு கயிற்றை உடலில் உள்ள சேணத்துடன் இணைக்க அவர்கள் முற்றிலும் மறந்துவிட்டதால், அந்தப் பெண் நேரடியாக தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து நடந்தவுடன், நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் அங்கிருந்து தப்பித்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஓடினர். இருப்பினும், காவல்துறையினர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்களைக் கைது செய்தனர். இந்த அலட்சியக் கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நடந்த அடுத்த கணமே, ‘என்ட்ரே கோர்டாஸ்’ நிறுவனம் தனது அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் இணையத்தில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டு தலைமறைவாக முயன்றது அம்பலமாகியுள்ளது.

https://twitter.com/InesBetancur1/status/2065922233848279293/video/1

விபத்து நடந்த இந்த பாலம் எவ்வித அரசாங்க ஒழுங்குமுறையோ அல்லது அனுமதியோ இல்லாத ஒரு கைவிடப்பட்ட ஆபத்தான பகுதியாகும். இருப்பினும், இளைஞர்கள் மத்தியில் ‘ரோப் ஜம்பிங்’ எனப்படும் கயிறு கட்டி குதிக்கும் சாகச விளையாட்டுக்கு இது மிகவும் பிரபலமான இடமாக இருந்து வந்துள்ளது. முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல், வணிக நோக்கத்திற்காக இத்தகைய ஆபத்தான சாகசங்களை நடத்தியதே இந்த இளம் பெண்ணின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“பழிக்கு பழி வாங்க இப்படி ஒரு ஸ்கெட்ச்சா?”… யூடியூப்பில் ‘அதை’ தேடிப் பார்த்த விவசாயி… நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம்… பதறவைக்கும் பின்னணி….!

இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…

6 minutes ago

BREAKING: அதிமுகவில் மேலும் 5 பேர் ராஜினாமா செய்தனர்…. EPS-ஐ அதிரவைத்த மாஜி அமைச்சர்களின் மூவ்…. உச்சக்கட்ட பரபரப்பு….!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…

11 minutes ago

வைகோ சொன்ன ‘அந்த’ ரகசியம்.. திமுகவின் அடுத்த மூவ்…. தவெக-வை வீழ்த்த ஸ்டாலின் போட்ட ரகசிய கணக்கு… அம்பலமான அரசியல் வியூகம்….!

தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…

20 minutes ago

“பதவியும் வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்”…. EPS முகத்தில் காகிதத்தை எறிந்த 9 மூத்த தலைவர்கள்… கதிகலங்கிப் போன எடப்பாடி…. விடிய விடிய நடந்த சதி….!

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…

26 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா… ஆளுங்கட்சியை உலுக்கும் குதிரை பேர விவகாரம்…. வெளியான பகீர் தகவல்…!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…

51 minutes ago

“அப்பாகிட்ட சொல்லாதே”… மகள் கொடுத்த ஒற்றை க்ளூ… வேலூரில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை… கதவைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…

1 மணத்தியாலம் ago