நியூயார்க் நகர காவல் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெர்மி ஷூப்லின், தனக்குக் கீழ் பணிபுரியும் ஒரு கறுப்பினப் பெண் அதிகாரிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக பிராங்க்ஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி 1 அன்று, ஷூப்லின் தனது அலுவலகத்திற்கு அந்தப் பெண் அதிகாரியை அழைத்து, வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆயுதமேந்தியிருந்த ஷூப்லினை எதிர்த்துப் போராடாவிட்டால் அவர் தன்னைக் வன்கொடுமை செய்து விடுவார் என்று அஞ்சியதாகத் தெரிவித்துள்ள அந்தப் பெண், தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியபோது, “உன்னுடன் சேர்ந்து கலப்பினக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று ஷூப்லின் கூறியதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது அமெரிக்கப் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி இந்தத் தாக்குதல் குறித்து உடனடியாகத் தனது மேலதிகாரிகளிடம் துணிச்சலுடன் புகாரளித்த போதிலும், நியூயார்க் நகர காவல்துறை ஷூப்லினை ஓராண்டிற்கும் மேலாக அதே அதிகாரப் பதவியில் நீடிக்க அனுமதித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இது குறித்துப் பேசிய பெண்ணின் வழக்கறிஞர் ஜான் ஸ்கோலா, வழக்கு குற்றவியல் விசாரணைக்குச் சென்ற பிறகும் கூட, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியைப் பணியிலிருந்து நீக்க காவல்துறைக்குத் துணிச்சல் இல்லை எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கடந்த மாதம் ஓய்வுபெற விண்ணப்பித்திருந்த இன்ஸ்பெக்டர் ஜெர்மி ஷூப்லின், சமீபத்தில் NYPD-இன் உள்ளக உத்தரவின்படி தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் கஜ்ரானா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த 26 வயதான பாலக் கேசவ்…
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை முன்வைத்து, ஆகஸ்ட் 2-ம் தேதி கன்னியாகுமரியில் தூய்மைப் பணியைத் தொடங்கி வைக்கும் அண்ணாமலை, அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட்…
வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தவெக அரசின் முதலாவது தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நிதி அமைச்சர்…
கேரளா மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோழிக்கோடு - திருச்சூர் நெடுஞ்சாலையில் இன்று காலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று…
ராஜஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறையின் இணை இயக்குநரான பிரத்யுமன் தீக்சித், அரசு டெண்டர்களை வழங்குவதற்குப் பதிலாக, இரு தனியார் நிறுவனங்களிடம்…
பஞ்சாங்கக் கணக்கீட்டின்படி, தைரியம், ஆற்றல், வீரம் மற்றும் நிலத்தின் சின்னமாக விளங்கும் செவ்வாய் கிரகம், ஆகஸ்ட் 2, 2026 அன்று…