டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் பரபரப்பு….! பேடிஎம் வங்கி உரிமம் ரத்தானது ஏன்…? இதோ பின்னணித் தகவல்கள்…!!

By Devi Ramu on சித்திரை 26, 2026

Spread the love

இந்தியாவில் பிரபலமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையான பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி’ உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. வங்கி ஒழுங்குமுறைச் சட்ட விதிகளைத் தொடர்ந்து மீறியதாலும், நிர்வாக நடைமுறைகள் திருப்திகரமாக இல்லாததாலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கியைக் கலைப்பதற்கான பணிகளை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையான நிதி கையிருப்பு அந்நிறுவனத்திடம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உரிம ரத்து நடவடிக்கையானது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், சாதாரண பேடிஎம் யூபிஐ (UPI) செயலியைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை. பேடிஎம் க்யூஆர் கோட், சவுண்ட் பாக்ஸ், ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் போன்ற பிற சேவைகள் வழக்கம்போலத் தடையின்றிச் செயல்படும் என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, வங்கியல்லாத மற்ற டிஜிட்டல் சேவைகளை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்; பணப் பாதுகாப்பு குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.