நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் எப்போது திரைக்கு வரும் என்பதில் ரசிகர்கள் மத்தியில் இருந்த ஆர்வம் சமீபமாக காணாமல் போய்விட்டது. ஏனென்றால் எப்படியும் அந்த படம் இப்போதைக்கு திரைக்கு வராது என்ற முடிவுக்கு ரசிகர்களே வந்து விட்டனர். இந்நிலையில் சென்சார் ரிீவைசிங் கமிட்டி இன்னும் ஜனநாயகன் படத்தை பார்க்கவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தரப்பில் சென்னையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
அப்போது, சென்னை அலுவலகத்தை பொருத்தவரை படம் பார்க்கும் அதிகாரம் மட்டும்தான் எங்களிடம் உள்ளது. ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பது மும்பையில் உள்ள சென்சார் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவர்கள் ரீவைசிங் கமிட்டி படம் பார்ப்பதாக எங்களுக்கு சொன்னால் நாங்கள் அந்த தகவலை உங்களுக்கு தெரிவிப்போம். மற்றபடி மும்பை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ரீவைசிங் கமிட்டி விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது என்று சென்னை சென்சார் போர்டு அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
