ஆக்ரா மருத்துவமனையின் அவலம்!… 5 வயது சிறுவனை பதம் பார்த்த ‘இன்பெக்டட்’ ஊசிகள்… கதறும் பெற்றோர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!!

By Muthu Mani on வைகாசி 7, 2026

Spread the love

ஆக்ராவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோது, அங்கு அஜாக்கிரதையாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த பயன்படுத்தப்பட்ட ஊசிகள் அவன் கையை குத்தின. இதனால் சிறுவனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதோடு, தொற்று ஏற்படும் அபாயமும் உருவானது. உடனடியாக அந்தச் சிறுவன் மேல்பரிசோதனைக்காக உயர் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதுடன், அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நிலவுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தான் ஆக்ராவின் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்று, இந்த மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தவும் இத்தகைய அலட்சியங்களைத் தவிர்க்கவும் அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். ஆட்சியரின் நேரடி ஆய்வுக்குப் பிறகும், மருத்துவமனை நிர்வாகம் எந்த மாற்றமும் இன்றி இவ்வளவு பெரிய பாதுகாப்புக் குறைபாட்டுடன் செயல்படுவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.