Connect with us

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

CINEMA

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவையால் பலரையும் சிரிக்க வைத்த ரோபோ சங்கர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வளம் வந்தார் . பின்னர் வெள்ளித்திறையிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

   

மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வாயை மூடி பேசவும், விசுவாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். வெள்ளித்திரையில் தனது திறமையால் பிரபல நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர் கமலஹாசனின் தீவிர ரசிகர் ஆவார்.  ரோபோ சங்கர் மகள் இந்திரஜா ரோபோ சங்கர். திகில் திரைப்படத்திலும் அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தனது உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர். அதைத்தொடர்ந்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் கமலஹாசன். சிவகார்த்திகேயன். விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இந்திரஜா தனது கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வரும் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் மிகவும் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். மேலும் இந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்த அவரது கணவர் கார்த்திக் ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி, லவ் யூ பாப்பா என்னை எல்லா வகையிலும் நிறைவு செய்யும் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் புன்னகைக்கு உன் அன்பு தான் காரணம். இந்த வாழ்க்கை பயணத்தை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.. என் அழகியே! என்று பதிவிட்டிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top