அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அமைதி வாரியத்தில் பாலஸ்தீனியர்களுக்கு முறையான பலன்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த வாரியத்தில் இருந்து இந்தோனேசியா விலகும் என அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் காசாவில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இந்த வாரியத்தில் இந்தோனேசியா இணைந்தாலும், அது பாலஸ்தீன மக்களின் நலன்களுக்கு எதிராகவோ அல்லது இந்தோனேசியாவின் தேசிய கொள்கைகளுக்கு முரணாகவோ அமைந்தால் உடனடியாக வெளியேறுவோம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவிற்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்ப பிரபோவோ ஒப்புக்கொண்டதற்கு அந்நாட்டு முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், உள்ளூர் முஸ்லிம் தலைவர்களுடனான சந்திப்பின் போது பேசிய அதிபர், இந்த வாரியத்தில் பங்கேற்பது பாலஸ்தீனத்தின் நீண்டகால அமைதிக்கான முயற்சி மட்டுமே தவிர, அவர்களின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்காக அல்ல என்று விளக்கமளித்துள்ளார். இந்தோனேசிய அரசின் இந்தத் தீர்மானமான முடிவு சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் திமுகவிற்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ஆர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மிகக்கடுமையாகச் சாடினார்.…
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…