“பர்கர் கறியைப் பிடுங்கி… வீட்டின் கதவையே கழட்டி எறிந்த கொடூரம்…” கல்லை எறிந்து வாடகைதாரரைத் தாக்கிய இந்தியப் பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

By Devi Ramu on புரட்டாதி 12, 2026

Spread the love

கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், தனது வீட்டை 50 வயதுடைய நபர் ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், அந்த வாடகைதாரர் தனது நண்பருடன் இணைந்து வீட்டின் தோட்டத்தில் பார்பிக்யூ சமைத்துள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அந்த வீட்டு உரிமையாளர் பெண், “சுவரில் கறை படிந்துவிடும்” எனக் கூறி சண்டையிட்டுள்ளார்.

சண்டை முற்றவே, கிரில்லில் வெந்துகொண்டிருந்த கறித் துண்டுகளைப் பிடுங்கி வீசிய அந்தப் பெண், வாடகைதாரர் மீது கற்கள் மற்றும் பொருட்களை வீசி எறிந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி, வாடகைதாரருக்குத் தெரியாமல் பூட்டை மாற்றுவது, வீட்டின் பிரதானக் கதவையே கழற்றி எறிந்து பாதுகாப்பு இல்லாமல் செய்வது எனத் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DdD276UBTNp/?utm_source=ig_web_copy_link&stkn=MzRlODBiNWFlZA==

   

பாதிக்கப்பட்ட வாடகைதாரர் இச்சம்பவங்களை வீடியோவாக எடுத்து ‘Tiwana Farm Servivor’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடவே, அது இணையத்தில் காட்டுத்தீ போல வைரலானது. இந்த வீடியோக்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனடா போலிஸார், வாடகைதாரரை அச்சுறுத்தித் தாக்கிய இந்தியப் பெண்ணைக் கையோடு கைவிலங்கு போட்டுக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.