ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்…. இந்திய முதலீட்டாளர்களுக்கு மரண அடி…. ஒரே நாளில் பங்குச்சந்தையில் நடந்த அந்தப் பெரும் துயரம்….!

By Nanthini on பங்குனி 9, 2026

Spread the love

மத்திய கிழக்குப் பகுதியில் வெடித்துள்ள போர் பதற்றம் இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய நிலையில், இதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புவிசார் அரசியல் நெருக்கடியால், முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ரூ.31 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இந்த மோதல் காரணமாக இன்று திங்கட்கிழமை ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தைகள் சுமார் ரூ.12.78 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை இழந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1352 புள்ளிகள் சரிந்து 77,566 புள்ளிகளாகவும், நிஃப்டி 422 புள்ளிகள் குறைந்து 24,028 புள்ளிகளாகவும் முடிந்துள்ளன. கடந்த ஓராண்டில் இந்தியப் பங்குச்சந்தைகள் சந்தித்துள்ள மிக மோசமான சரிவாக இது கருதப்படுகிறது.

   

இந்தப் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 114 டாலரைக் கடந்து உயர்ந்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு பணவீக்கம் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து, இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வெளியேறி வருகின்றனர்.

   

கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். வங்கித் துறை மற்றும் இதர முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. மத்திய கிழக்கு மோதல் நீடிக்கும் பட்சத்தில், அது இந்திய பங்குச்சந்தைகளில் இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.