ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் இந்தியாவில் மட்டுமின்றி உலகில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த நாள் கொண்டாடப்படும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் கடந்த 20ஆம் தேதி நேற்று இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஏற்கனவே இது போன்ற விழாவில் நடிகர்கள் அபிஷேக் பச்சன், அல்லு அர்ஜுன் ஆகியோர் கலந்திருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது சினிமாவில் இருந்து குறுகிய காலத்திற்கு ஓய்வு எடுத்து வரும் சமந்தா பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.
தற்பொழுது அவர் மயோசிட்டிஸ் நோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற 41வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த சுதந்திர தின அணிவகுப்பில் நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் தேசிய கொடிகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
41வது ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பை இசை கலைஞர்களின் பாண்டு இசை சாலையின் வழிநெடுகிலும் திரண்ட இந்தியர்களை குதூகலப்படுத்தியது. இந்த விழாவில் நடிகை சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு பங்கேற்றனர். அவருக்கு இந்திய ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் , வீடியோக்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…