தமிழகத்தில் அரசு பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்பணத்தை அரசு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகின்றது. அதன்படி தொழில் கல்வியில் சேர 50 ஆயிரம் ரூபாயும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர 25 ஆயிரம் ரூபாய் என கல்வி முன் பணம் வழங்கப்படுகிறது.
இப்படியான நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து தொழில்கல்வியில் சேர ஒரு லட்சமும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேர 50,000 ரூபாய் என கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
