நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், சில இடங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் ₹7,000 வரை விற்கப்படுவதாக வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தட்டுப்பாட்டினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்களில் உணவுப் பட்டியலின் அளவைக் குறைத்தும், விலையை உயர்த்தியும் உள்ளனர். இதனால் ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
