#image_title
கார்த்திகை மாதம் வந்து விட்டாலே எல்லோரும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு செல்வதுண்டு. இந்த சீசன் முழுவதுமே ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தால் சபரிமலையே நிரம்பி வழியும். கன்னி சாமிகளும் ஐயப்பனுக்கு மாலை போட்டு செல்வார்கள். அப்படி செல்லும்போது அவர்களது வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் எல்லாம் நடைபெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.
அப்படியே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து மலைக்கு செல்ல கிளம்புவதற்கு முன்பாக இருமுடி கட்டுவார்கள். இந்த இருமுடியில் சபரிமலை ஐயப்பன் பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்திருப்பார்கள். அதில் பிரதானமாக வைக்கக்கூடியது தேங்காய். இந்த தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் ஒரு கண்ணை மட்டும் திறந்து நீரை வெளியேற்றி விடுவார்கள்.
அதற்கு அடுத்ததாக அதில் காய்ச்சிய நெய்யை ஊற்றி அதன் மேலே அந்த கண்ணை மூடி உளுந்து மாவினால் வைத்து அடைத்து விடுவார்கள். இதுதான் இருமுடியில் வைக்கப்படும் மிக முக்கியமான பொருள் ஆகும். எதற்காக இருமுடியில் இந்த நெய் தேங்காயை கொண்டு செல்கிறார்கள் அதன் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த நெய் தேங்காயின் ரகசியம் என்னவென்றால் தேங்காய் ஓடு நம் உடலைக் குறிக்கிறது. அதில் இருக்கும் நெய் உயிரைக் குறிக்கிறது. இந்த தேங்காயை சபரிமலைக்கு எடுத்துச் சென்று ஐயப்பனுக்கு அபிஷேகத்துக்காக நெய்யை தந்து விட்டு அந்த தேங்காயை அங்கேயே எரித்து விடுவார்கள்.
அதாவது சபரிமலை ஐயப்பா என் உயிரை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு என் பூத உடலை இங்கு எரித்துவிட்டேன். இதில் என் சுக துக்கங்களும் சேர்ந்து அகன்றுவிட்டது. இனி என் வாழ்க்கையை நீ பார்த்துக் கொள் உன் திருவடியில் என் உடலையும் உயிரையும் சமர்ப்பித்து விட்டேன் என்பதே இதன் பொருளாகும்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…
டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…