Connect with us

‘வேட்டையன்’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இது தானா..? ஏற்கனவே மொக்கை வாங்குனத மறந்திட்டீங்களே தலைவரே..

CINEMA

‘வேட்டையன்’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் இது தானா..? ஏற்கனவே மொக்கை வாங்குனத மறந்திட்டீங்களே தலைவரே..

 

“ஜெய் பீம்” படம் மூலம் மாபெரும் கருத்தைக் கொண்டு வந்த இயக்குனர் T.J ஞானவேல் அவர்கள் தற்போது ரஜினி அவர்களை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆக்சன் ட்ராமா கதையான இப்படத்தை D.J ஞானவேல் இயக்கத்தில் ரஜினி அவர்கள் நடிப்பு மற்றும் பகத்வாசில், அமிதாபச்சன், ராணா, ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், மஞ்சு வாரியர் ஆகிய பல பிரபலங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார்கள். இப்படத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்க, லைக்கா ப்ரொடக்ஷன் இப்படத்தை வெளியிடுகிறார்கள், தற்போது இப்படம் மிக வேகமாக கடைப்பிடிப்பு முடிந்து வருகிறது, மிக விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

   

D.J ஞானவேல் இயக்குனர் தரப்பில் இருந்து இப்படம் இன்னும் ஒரு மாத காலத்தில் முழுமையாக முடிவடைந்து விடும் என்று தெரிந்தது, ஆனால் தற்போது ரஜினி அவர்களுக்கு இன்னும் பத்து நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது, அதன்பின் ரஜினி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தலைவர் 171” படத்திற்கான வேலை துவங்கும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

தற்போது ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தில் ரஜினி அவர்கள் ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறாராம், இப்படத்தில் போலீசாரால் திட்டமிடப்பட்டு என்கவுண்டர் நடந்ததை வைத்து கதை செல்வதாக அமைந்துள்ளதாம், ஆனால் ரஜினி அவர்கள் இப்படத்தில் திட்டமிட்டு வேணும்னே செய்யும் என்கவுண்டரை ரஜினி அவர்கள் தான் செய்தாரா இல்லை, இந்த திட்டமிடப்பட்ட என்கவுண்டரை கண்டறியும் விசாரணை காவலராக வருவாரா என்று தான் சந்தேகமாக உள்ளது,

ஆனால் இணையத்தில் பரவி வரும் விஷயம் என்னவென்றால் இப்படத்தில் நல்ல மனிதர் ஒருவரை குற்றவாளியாக பிம்பம் காமித்து அவரை திட்டமிடப்பட்டு என்கவுண்டர் செய்வதுபோல், அதை ரஜினி அவர்கள் விசாரித்து உண்மையை கண்டறிந்த வெளிச்சத்திற்கு கொண்டுவரும் காவல் அதிகாரியாக இருக்கிறார், என்று கூறப்படுகிறது.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top