தமிழகத்தில் முடி மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அழகு சார்ந்த மருத்துவ நடைமுறைகளுக்கு மாநில அரசு மற்றும் மருத்துவக் கவுன்சில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தகுதியற்ற நபர்களால் நடத்தப்படும் போலி கிளினிக்குகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ளும் மையங்கள் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், அவை அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, பிளாஸ்டிக் சர்ஜரி (MCh/DNB Plastic Surgery) அல்லது தோல் நிபுணத்துவம் (MD/DNB Dermatology) பெற்ற தகுதியான மருத்துவர்கள் மட்டுமே முடி மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்ய அனுமதிக்கப்படுவர். சமீபத்தில் சென்னை அண்ணா நகர் பகுதியில் முறையான மருத்துவப் படிப்பு முடிக்காத நபர்கள் சிகிச்சையளித்த புகாரில் மூவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இத்துறை சார்ந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை வெறும் ‘சலூன் சேவை’யாகக் கருதாமல், முறையான ‘அறுவை சிகிச்சை’யாகக் கருதி செயல்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அறிவுறுத்தியுள்ளது.
குறைந்த செலவில் சிகிச்சை பெற நினைக்கும் பொதுமக்கள், போலி மையங்களை நாடி உயிரிழப்பு போன்ற விபரீதங்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் தகுதியான நிபுணர்களிடம் மட்டுமே அழகு சார்ந்த சிகிச்சைகளைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியற்றவர்கள் இத்தகைய சிகிச்சைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது, இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தை உறுதி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…