2027-ல் சாதி வாரியான கணக்கெடுப்பு….! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய கால அட்டவணை…!!

By Devi Ramu on தை 28, 2026

Spread the love

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும். இதைத்தொடர்ந்து, சாதி வாரியான கணக்கீடு உள்ளிட்ட இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027 பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தொடங்கப்படும்.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி வழியாக நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல் போன்ற பனிப்பொழிவு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் இரண்டாம் கட்ட பணிகள் முன்கூட்டியே செப்டம்பர் மாதமே தொடங்கிவிடும். துல்லியமான தரவுகளைப் பெற்று மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முறையாகத் திட்டமிடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.