நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் கடந்த பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், சிறுமி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “நானும் உங்கள் ரசிகைதானே, உங்கள் திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த மழலை மாறாத கேள்வி இணையதளங்களில் வேகமாகப் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்தது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை கவனித்த விஜய் தேவரகொண்டா, அந்த சிறுமிக்கு மிகவும் கனிவான முறையில் பதிலளித்து அனைவரது இதயங்களையும் வென்றுள்ளார். தனது பதிலில், அந்த சிறுமியைத் தனது வீட்டிற்கு மதிய உணவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததோடு, அவருக்குப் பிடித்த இனிப்புகள் மற்றும் உணவுகள் என்ன என்பதைத் தெரிவித்தால் அவற்றை ஒன்றாகச் சேர்ந்து ரசிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது திருமண மகிழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, பல்வேறு நகரங்களில் இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் செய்தும் விஜய்-ராஷ்மிகா ஜோடி தங்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
