![ilaiyaraja - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/05/ilaiyaraja-1.jpg)
CINEMA
கண்மணி அன்போடு காதலன்.. இளையராஜா செய்த அடுத்த சம்பவம்.. மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவுக்கு பறந்த நோட்டீஸ்..!
பிரபல இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அவருடைய வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமா இந்த ஆண்டு துவக்கம் முதலே சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.
தமிழில் எந்த திரைப்படமும் இதுவரை இந்த அளவுக்கு ஹிட் கொடுக்காத நிலையில் மலையாள மொழியில் வெளியான 5 திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று மலையாள சினிமாவை புகழ்ந்து பேச வைத்துள்ளது. மலையாளத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் வெளியான பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதிலும் தமிழ் ரசிகர்களால் அதிக அளவில் பாராட்டப்பட திரைப்படமாக மாறியது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான். அந்த திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய குணா திரைப்படத்தில் இருந்து கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை ஒளிபரப்பி அனைவரையும் கவர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கின்றார். தன்னுடைய பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி அப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குணா திரைப்படத்தில் வரும் பாடலை இசை அமைத்தவர் இசைஞானி.
இளையராஜா பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
ஏற்கனவே லோகேஷ் தங்கராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் டைட்டர் டீசரில் தனது பாடலில் அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறி பட குழுவுக்கு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் தற்போது அஞ்சு மேல் பாய்ஸ் படக்குழுவினருக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவினர் விரைவில் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.