Connect with us

இளையராஜாவின் மருமகன் யார் தெரியுமா..? மறைந்த பாடகி பவதாரணியின் கணவர் பற்றி வெளியான தகவல்..

TRENDING

இளையராஜாவின் மருமகன் யார் தெரியுமா..? மறைந்த பாடகி பவதாரணியின் கணவர் பற்றி வெளியான தகவல்..

திரைப்பட பின்னணி பாடகியான பவதாரணி இசையமைப்பாளர் இளையராஜா சகோதரர்கள்  இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா என்ற இசை குடும்பத்தில் பிறந்தவர்; இதனாலேயே இசை அவர்கள் ரத்தத்திலேயே ஊறிப் போனது.

47 வயதான பாடகி பவதாரணி கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைந்த செய்தி கேட்டு திரை உலகினர் அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். திரைப்பட பின்னணி பாடகியான பவதாரணி தனது வித்தியாசமான குரல் மூலம் பல பாடல்களை  பாடி உள்ளார்.

   

 

மேலும் இவர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் மட்டுமே ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பவதாரணி தனது பாடல்கள் மூலம்  தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

2005 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் வைத்து பாடகி பவதாரணிக்கும் பிரபல விளம்பர தொழிலதிபர் சபரி ராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இவர்களுடைய ரிசப்ஷன் சென்னையில் உள்ள மேயர் ராமநாதா  திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பத்திரிக்கையாளரான எஸ் என் ராமச்சந்திரன் மகன் தான்  சபரிராஜ்.

இந்த தம்பதிகளுக்கு இன்றுவரை குழந்தை இல்லை என்பது வருத்தமான ஒன்றாகும். மேலும், புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த நிலையில் பாடகி பவதாரணி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

#image_title

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top