Categories: சினிமா

என் கிட்ட வந்து உங்க இஷ்டத்துக்குப் பாட முடியாது… திட்டிய இளையராஜா –TMS மகள் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.

டி எம் சௌந்தர்ராஜன் 10000க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் 2500க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்த காலகட்டங்களில் அதிகளவில் மேடைக் கச்சேரிகளில் அவர் கலந்துகொண்டு பாட ஆரம்பித்தார். அதில் சினிமா மேடைக் கச்சேரிகளும் கோயில் திருவிழா போன்ற மேடைக் கச்சேரிகளிலும் பங்கேற்று பாடல்களை பாடினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர். இளையராஜா தன் இசையில் டி எம் சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தவே இல்லை. அதற்கு இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டி எம் சௌந்தர்ராஜனின் மகள் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் இதுபற்றி பேசியுள்ளார். அதில் “எங்க அப்பா உச்ச ஸ்தாயியில் பாடி பாடி அவரின் காது கேட்கும் திறன் குறைந்தது. கடைசி காலத்தில்தான் அவர் ஹியரிங் எய்ட் வைத்துக் கொண்டார். ஒருமுறை இளையராஜா இசையில் பாட சென்ற போது அவர் சொன்ன கரெக்‌ஷன் இவர் காதில் சரியாக விழவில்லை போல.

அதனால் இளையராஜா அப்பாவைத் திட்டியுள்ளார். நீங்க வேற எங்க வேணா எப்படி வேணா பாடிக்குங்க. ஆனால் என் இசையில் பாடும்போது நான் சொல்லிக் கொடுக்கும்படிதான் பாடவேண்டும் எனத் திட்டிவிட்டார். அதனால் அப்பாவும் அந்த பாடலை பாடாமல் வந்துவிட்டார். அதன் பின்னர் இளையராஜா அவரைக் கூப்பிடவும் இல்லை. ஆனால் அப்பா அவரைப் பற்றி எல்லோரிடமும் நல்ல விதமாகதான் சொல்லுவார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

3 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

10 minutes ago

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

19 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

28 minutes ago

Breaking: “விஜய்க்கு நான் கொடுத்த பச்சைக்கொடி”… ஸ்டாலின் வெளியிட்ட அதிரடித் தகவல்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…

33 minutes ago

மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை?… அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…

38 minutes ago