தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என அதிரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சியை எப்படியாவது தமிழகத்தில் நிலைநாட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறது.
இப்படியான நிலையில் ஐ ஜே கே, NDA கூட்டணியில் தொடர்வதாக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உறுதி செய்தார். சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறினார். குறிப்பாக லால்குடி, குன்னம், திருவாடனை, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னையில் ஒரு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக TVK கூட்டணியில் IJK இணைய உள்ளதாக பேசப்பட்ட நிலையில் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…