அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து வந்த ஏழை பெண் பவாநியா தற்பொழுது தனது விடாமுயற்சியினால் தமிழகத்தின் இளம் வயது டிஎஸ்பி ஆக உருவாகியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீழ செட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பவானியா. இவர் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. ஒரு அடிப்படை வசதியான சாலை கூட இவருடைய கிராமத்தில் சரியாக இல்லை. இவருடன் சேர்ந்து மொத்தம் 4 பெண் பிள்ளைகள் இவரது குடும்பத்தில்.சிறு வயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்ட பவானியா எப்பொழுதும் முதல் மதிப்பெண் எடுக்க கூடியவர்.
தற்போது இவர் இளங்கலை கணிதம் படித்து பின்னர் குரூப் ஒன் எக்ஸாம் தேர்வு எழுதினார். அதில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார். பின்னர் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்டு அதிலும் செலக்ட் ஆகியுள்ளார். இதன் மூலம் அவர் தமிழகத்தின் 23 வயது இளம் டிஎஸ்பியாக உருவாகியுள்ளார்.
தற்பொழுது இவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் மாணவர்களுக்குதன்னம்பிக்கை ஊட்டும் அறிவுரைகளை கூறியுள்ளார். மேலும் இவர் தனது லட்சியம் மாவட்ட ஆட்சியர் ஆவதே அதற்காக மீண்டும் தேர்வு எழுதி அந்த பதவியை அடைவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். தற்பொழுது இவரது பேட்டி சமூக வலைத்தளங்களில் தன்னம்பிக்கை ஊட்டும் வீடியோவாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…
காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…