“வட்டி மட்டுமே ரூ.30,908” கைநிறைய பணத்தை கொடுக்கும் வங்கியின் அருமையான திட்டம்… உடனேயே ஜாயின் பண்ணுங்க..!!

By Divyamayakannan on ஆவணி 25, 2025

Spread the love

ரிசர்வ் வங்கி [FD] எஃப்.டி, விகிதத்தைக் குறைத்த பிறகு, அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தைக்  குறைத்தன. இருப்பினும் இன்று வரை யூனியன் வங்கி மட்டும் அதிக வட்டியைக் கொடுத்து வருகிறது. இந்தியாவில் குறைந்தபட்சம் 7நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நிலையான வைப்பு கணக்கை யூனியன் பேங்கில் திறக்கலாம் . 3.40% முதல் 7 .35%  வரை வட்டி வழங்கிவருகிறது. உதாரணத்திற்கு ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ. 30,908 வரை வட்டி பெறலாம்.

பொது குடிமக்களுக்கு 6.50% வட்டியும், சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.00% வட்டியுடன் சேர்த்து இரண்டு வருட நிலையான வைப்புத் தொகையும் யூனியன் பேங்க் ஆஃப் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுக் குடிமக்கள் ரூ. 2 லட்சத்தை டெபாசிட் செய்தால் இரண்டு வருடத்தில் ரூ. 2,27,528 கிடைக்கும். மூத்த குடிமக்கள் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால் இரண்டு வருடத்தில் ரூ. 2, 29,776 கிடைக்கும். சூப்பர் சீனியர் குடிமக்கள் ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால் இரண்டு வருடத்திற்கு பிறகு 2,30,908 ரூபாய் கிடைக்கும்.