நடிகை சமந்தா ‘யசோதா’ திரைப்படத்திற்காக கோடிகளில் வாங்கிய சம்பளம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சமந்தா தெலுங்கில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.தன்னுடைய தனிச்சிறப்பு மிக்க நடிப்பால் இவர் இந்திய அளவில் சிறந்த நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார். ஸ்ரீதேவி மூவி சார்பில் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.
ஹரி ஹரிஷ் என்கிற இரட்டையர்கள் இப்படத்தை இயக்கி வருகின்றனர். இப்படத்தில் சமந்தா உடன், வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா கர்ப்பிணி பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு நடிகை சமந்தா ரூபாய் 2.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் இவர் தற்பொழுது நடித்து வரும் படங்களுக்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளமாக கேட்கிறாராம். தற்பொழுது இவரது சம்பளம் பற்றி கேள்விப்பட்ட திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…