#image_title
கார்த்திகை மாதம் வந்துவிட்டது. இது ஐயப்பனுக்கு உகந்த மாதம். இந்த மாதம் வந்துவிட்டால் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரிமலைக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்வார்கள். கேரளா மட்டுமல்ல தமிழகம் ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருவார்கள்.
ஒவ்வொரு வருடமும் புதுப்புது கன்னி சாமிகளும் சபரிமலையை தேடி வருவதுண்டு. 48 நாட்கள் என ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து பம்பை நதியில் குளித்துவிட்டு 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தால் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை.
தற்போதைய காலகட்டத்தில் சபரிமலைக்கு அதிகப்படியான பக்தர்கள் வருகிறார்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. அதனால் கோவில் தேவஸ்தானம் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சமீபத்தில் கோவிலுக்கு ஐயப்பனை தரிசிக்க வருபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு தான் வரவேண்டும் என்ற ஒரு விதியை அறிவித்தார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
தற்போது சபரிமலை கோவில் தேவஸ்தானம் புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது என்னவென்றால் சபரிமலை கோவிலில் ஸ்பாட் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டை பதிவு செய்யலாம். ஆனால் உங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் சபரிமலைக்கு செல்வோர் கட்டாயம் உங்கள் ஆதார் கார்டை கையில் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…