அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் போட்டியாளராக கருதப்படும் சீனா, இந்த வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், “அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன, ஆனா எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன. நான் அவற்றை எடுத்து விளையாட விரும்பவில்லை. அப்படி நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதனால் தான் நான் இப்போது அதை செய்யவில்லை” என சீனாவை சீட்டாட்டத்தின் பாணியில் விமர்சித்தார்.
அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை தடுத்து நிறுத்த சீனா முயற்சித்தால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என டிரம்ப் எச்சரித்தார். அத்தகைய சூழலில் சீனா மீது 200 % வரிகளை விதிக்க, சிறிதும் தயங்க மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டார். அதேசமயம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது விரைவில் நான் சீனாவுக்கு செல்லவிருக்கிறேன், இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த நட்புறவு இருக்கும் என்று டிரம்ப் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…