நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற ஊகங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, த்ரிஷா அவருடன் நெருக்கம் காட்டி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் போது அவர் விஜய் வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் உரையாடியது முதல், விஜய்யின் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் த்ரிஷாவின் பெயரும் அவரது இருப்பும் அடிபடுவது வரை அனைத்தும் இணையத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷா பேசிய பழைய நேர்காணல் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. 2004-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், “எனக்கு முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; இன்னும் 10 ஆண்டுகளில் பாருங்கள்” என்று த்ரிஷா மிகவும் தன்னம்பிக்கையுடன், அதே சமயம் புன்னகையோடு கூறியுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அவர் விளையாட்டாகச் சொன்ன அந்த வார்த்தைகள், தற்போது அவர் தீவிர அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.
சினிமாவில் 22 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் முன்னணி நாயகியாக வலம் வரும் த்ரிஷா, பல இளம் நடிகைகளுக்கு சவாலாக விளங்குகிறார். தற்போது விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், த்ரிஷாவின் இந்த பழைய வீடியோவும், சமீபகாலமாக அவர் காட்டி வரும் அரசியல் ஈடுபாடும் வெறும் தற்செயலான நிகழ்வா அல்லது நிஜமாகவே அவர் ‘மௌனமான’ ஒரு அரசியல் நகர்வை மேற்கொள்கிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். த்ரிஷாவின் இந்த பழைய பேச்சு, அவரது எதிர்கால அரசியல் கனவின் விதையாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
திரைத்துறையில் இருந்து அரசியல் அரியணை ஏறிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து முழுவீச்சில் பணிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும்,…
தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…
அதிமுகவின் உள்கட்சிப் பூசல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான 'நமது அம்மா'…
குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், ஏசி-யை ஆன் செய்தபோது அதிலிருந்து வினோதமான சத்தம் கேட்டுள்ளது. இதனால்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி…
அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்கள் சிலரை ஆசிரியர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும்…