விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் வலம் வந்தனர். அந்த வரிசையில் கடைசியாக இடம் பிடித்தவர்கள் அமீர் மற்றும் பாவனி. வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்த ஆமீர் பாவனியை காதலிப்பதாக பிக் பாஸில் கூறியிருந்தார். இருவரும் ஒன்றாக பிக் பாஸ் வீட்டில் சுற்றி திரிந்தனர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவர்கள் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினர். அப்பொழுது மோதிரம் கொடுத்து பாவனியிடம் ப்ரபோஸ் செய்தார் அமீர். அதற்கு அவர் எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது அவர் அமீரின் பிறந்த நாள் அன்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னராக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த மேடையிலேயே இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கூறினார்கள் .தற்சமயம் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாவனி, ‘பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன?’ என்பது குறித்து பேட்டியளித்திருந்தார்.
அதாவது அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘என்னுடைய ஷூவின் லேஸ் அவிழ்ந்தா கூட அமிர் உடனே அந்த இடத்திலேயே அதைக் கட்டி விடுவார். நிறைய பேர் இருக்காங்க, இது பொது இடம் அப்படின்னு பார்க்க மாட்டார். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கூட ஆண்கள் பெண்களை எப்படி பார்த்துக்கிறாங்க. இந்த மாதிரி ஆண்களை தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க பெருசா வேற எதுவும் செய்ய வேண்டாம்.’ என்று கூறியுள்ளார்.
அதோடு அடுத்த வருடம் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும். பிக் பாஸ் வீட்டிற்குள் அமீர் வந்த போதே தனக்கு அவரை பிடித்து விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது .
ரூ. 15 மதிப்புள்ள ஆர்டருக்கு ரூ. 500 டிப்ஸாகப் பெற்ற ப்ளிங்கிட் டெலிவரி ஊழியரின் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக…
விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…