‘எனக்கு Divorce ஆகிடுச்சு.. என் Family கூட இருக்கேன்’ … மகனுடன் நேரலையில் ஷாக் கொடுத்த ‘பாண்டவர் இல்லம்’ சீரியல் நடிகை…

By Begam

Published on:

நடிகை கிருத்திகா, “மெட்டி ஒலி” மூலம் தனது தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு வெற்றி வாய்ப்பு தேடி  வந்தது. பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார்.

   

இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான  ‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து நிறைய தொடர்கள் நடித்துவந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது மகனுடன் கலந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என கூறிய விஷயம் தற்பொழுது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘ எனக்கு Divorce ஆகிடுச்சு.  இதை நான் பெருசாக்கிக்க விரும்பல.  திருமணம் ஆனதிலிருந்தே எங்களுக்குள் பல பிரச்சனைகள் இருந்தது.

அதற்குப் பிறகு எல்லாம் பேசி தான் இந்த முடிவு எடுத்தோம். அந்த சமயத்தில் எனக்கு இருந்த ஒரே கவலை என்னுடைய மகன் தான். யாராவது தந்தை பற்றி கேட்கும் போது கஷ்டப்படுவானோ என்று தான் வருத்தப்பட்டேன். ஆனால் என்னுடைய அண்ணன் இவனுக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறார். எனக்கு இனி எந்த கவலையும் இல்லை. நான் இப்ப என் Family கூட தான் இருக்கேன்’ என கூறியுள்ளார். தற்பொழுது இத்தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)