இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது தோனியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. இப்படியான நிலையில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்ற தோனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய தோனி, அடுத்த வருடம் ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார். அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும். 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை.
இருந்தாலும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெறும். அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள். சூட்சமம் என்னவென்றால் உடல் தகுதிக்கு இன்னும் TICK மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே என்று தோனி தெரிவித்துள்ள நிலையில் தோனியின் இந்த தகவல் ஒரு வேளை அவர் ஓய்வு பெறுவாரா என்று ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.
