திருமணமான 15-வது நாளில் கொடூரம்… வீட்டிற்கு வந்த மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவனின் அண்ணன்.. பதறவைக்கும் சம்பவம்..!!

By Swetha on வைகாசி 22, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில் உள்ள கஞ்சரி கிராமத்தில், திருமணம் நடந்து வெறும் 15 நாட்களே ஆன சரிதா மராவி என்ற இளம்பெண் அவரது கணவரின் மூத்த சகோதரரால் (கொழுந்தனார்/மைத்துனர்) கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொடூரக் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் நடந்த போது, குடும்பத்தினர் அனைவரும் தங்களது வேலைகளுக்காக வெளியே சென்றிருந்ததால், புதுப்பெண் சரிதா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த கணவரின் அண்ணன், ஏற்பட்ட தகராறில் கோடரியை எடுத்து சரிதாவின் கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரிதா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

   

சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் சரிதாவை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கன்சூர் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.