“தம்பி மனைவியுடன் கள்ளக்காதல்.. மனைவியை கழிவறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்த கணவன்… தூக்கில் முடிந்த அந்தப் போராட்டம்… அதிர்ச்சியில் உறவினர்கள்”….!!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஜவகர் நகரைச் சேர்ந்த சுனில் குமார் என்பவருக்கும், லாவண்யா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு ஒரு உயிரைப் பறித்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா கடந்த இரண்டு வாரங்களாகப் பெருமாள் செட்டி தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி இரவு லாவண்யாவைப் பார்க்கச் சென்ற சுனில் குமார், அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்ததோடு குழந்தையைத் தன்னுடன் அனுப்பக் கோரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் லாவண்யாவின் கையிலிருந்த குழந்தையை அவர் பிடுங்க முயன்றதால் மனமுடைந்த லாவண்யா, கணவர் வாசலில் இருக்கும்போதே வீட்டிற்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தற்கொலை அல்ல, ஒரு திட்டமிட்ட கொலை என்று லாவண்யாவின் தாய் அமுதா பரபரப்பு புகாரைக் கிளப்பியுள்ளார். தனது மருமகன் சுனில் குமார், அவரது தம்பியின் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், இதைத் தட்டிக்கேட்ட லாவண்யாவைக் கழிவறையில் பூட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கூடுதல் நகை மற்றும் பணம் கேட்டு லாவண்யாவை அவரது கணவர் வீட்டார் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். “என் தம்பியின் மனைவியுடன் உறவில் இருக்கிறேன், உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று சுனில் குமார் திமிராகப் பேசியதாகவும், லாவண்யாவின் மரணத்திற்குச் சுனில் குமார், அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோரே காரணம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கோரியும், சுனில் குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும் லாவண்யாவின் உறவினர்கள் திருவள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பத்து மாதக் குழந்தையைத் தவிக்கவிட்டுத் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. தற்போது திருவள்ளூர் நகர போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

2 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

2 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

5 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

5 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago