அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். வீட்டில் இருந்த நாணய சேமிப்பு உண்டியலில் இருந்து தொடர்ந்து பணம் காணாமல் போனதால், திருடனைக் கண்டுபிடிக்க அவரது கணவர் வீட்டின் படுக்கையறை உட்படப் பல இடங்களில் ரகசியப் பாதுகாப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.
நாட்கள் கழித்து கேமரா பதிவுகளை ஆய்வு செய்த கணவருக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி. அதில், அவரது மனைவி மாலியா நும்மர்டோர் தங்கள் குடும்பத்தில் செல்லமாக வளர்த்து வந்த நாயுடன் தகாத மற்றும் அருவருக்கத்தக்கப் பாலியல் செயல்களில் ஈடுபடும் கொடூரக் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த கணவர், அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியதோடு, லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த சார்லட் கவுண்டி ஷெரிப் பிரிவு போலிஸார் தீவிர விசாரணை நடத்தியதில், அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துச் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, விலங்குகளைச் சித்ரவதை செய்தல் மற்றும் தகாத உறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அந்தப் பெண்ணை போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
