மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கணவர் ஒருவர் தன்னுடைய நண்பருக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்கு மனைவி விற்றதாக கூறப்படுகிறது . அதன்பிறகு அவருடைய மனைவியின் நண்பர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்கள். மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளார் .சூதாட்டத்தால் அவருக்கு 50000 ரூபாய் வரை கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக நண்பர்கள் சிலரிடம் பணம் வாங்கி வந்துள்ளார். இதனையடுத்து கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.
இதனால் கடனை அடைப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் நண்பர் ஒருவருக்கு தன்னுடைய மனைவியை விற்றுள்ளார். அந்த பெண்ணை தனக்காக அந்த நண்பர் பாலியல் அடிமையாக மாற்றி பலமுறை அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கொடுமை தாங்க முடியாத அந்த பெண் அவருடைய பிடியிலிருந்து தப்பித்து வந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் கணவரையும் பாலியல் பலாத்காரம் செய்த கணவரின் நண்பரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
