சென்னையில் உள்ள திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28) . இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது அனுசுயாவின் தம்பியின் நண்பரான முகேஷ், அவருடைய குடும்பத்த தகராறினால் தன் மனைவியைப் பிரிந்து கடந்த மூன்று மாதங்களாக அனுசுயாவின் வீட்டில் தங்கி வந்துள்ளார். அவரையும் தம்பி என்று அனுசியா அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. இத்தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் முகேஷ் என்பவர் அனுஷியாவையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் திருவெற்றியூர் தேரடி பகுதிக்கு அழைத்துச் சென்று துணிக்கடையில் துணி வாங்கிக் கொடுத்ததாக தெரிய வருகிறது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவெற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
வெங்கடேஷ் தற்கொலைக்கு முன்பு மனைவிக்கு எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது. கடிதத்தில் தம்பி தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்து விட்டாயே, என் சாவுக்கு காரணம் முகேஷ் என எழுதி இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
