உத்தரப் பிரதேச மாநிலம் சம்பாலில், அரசுப் பள்ளி ஆசிரியரான குல்தீப் என்பவர் தனது கர்ப்பிணி மனைவி ஆர்த்தியை பிரஷர் குக்கர் மூடியால் தாக்கிய கொடூரச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மூன்று முறை மனைவியை அடித்துத் துன்புறுத்திய நிலையில், தற்போது நான்காவது முறையாக நடத்தப்பட்ட இந்த மிகக்கடுமையானத் தாக்குதலால் ஆர்த்தி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியர் ஒருவரே, மனிதாபிமானமற்ற முறையில் தனது குடும்பத்தினருக்கு இத்தகைய சித்திரவதைகளை அளிப்பது கண்டனத்திற்குரியது.
A pregnant mother. A crying little girl. Both beaten by the same man… their husband and father.
📍 Sambhal, UPKuldeep, a govt teacher, used a pressure cooker lid on his wife Aarti.
This is the 4th time he has beaten her. She’s hospitalized. pic.twitter.com/Zh6mGPJ9Me— زماں (@Delhiite_) February 18, 2026
இந்தக் கொடூரத் தாக்குதலின் போது, தனது தாய் தாக்கப்படுவதைக் கண்டு சிறுமி அழுது துடித்தது பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையின் கண்ணீர் கூட அந்த நபரின் கல்நெஞ்சத்தை மாற்றவில்லை என்பது வேதனைக்குரியது. குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் குல்தீப் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுவது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கே கறையாக அமைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் உரியப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
