மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவரின் குடிப்பழக்கத்தால் மனம் உடைந்து மனைவி தன்னுடைய மூன்று சிறு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த சந்தியா சந்தீப் என்ற அந்தப் பெண் கடந்த ஜூலை 20ஆம் தேதி தன்னுடைய 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை கொடுத்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
முதலில் விபத்து மரணமாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு திசை மாறியது. குழந்தைகளின் உடலில் விஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொலை வழக்காக மாறிய நிலையில் தாய் சந்தியா கைது செய்யப்பட்டுள்ளார். கணவரின் குடிப்பழக்கம் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…