தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சைகளை இலவசமாகப் பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் 1,20,000 ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் இணைந்து, அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் மற்றும் மாரடைப்பு போன்ற 1000-க்கும் மேற்பட்ட மருத்துவச் சேவைகளைப் பெறலாம். இதற்கான காப்பீடு அட்டையைப் பெற ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாரச் சுகாதார நிலையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்களின் வசதிக்காக தற்போது ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாகவும் இந்த மருத்துவ அடையாள அட்டைகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. முகாம் நடைபெறும் இடத்திலேயே வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகள் எளிமையாக முடிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்குக் காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது புகார்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
