உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா?…. நீங்களே செக் பண்ண இதோ எளிய வழி…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நிதி தரவுகளை முறைப்படுத்தும் வகையில் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதை வருமானவரித்துறை கட்டாயமாகியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்று போல் ஆயிரம் ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி தங்களுடைய பான் கார்டு ஆதார் உடன் இணைக்க வேண்டும். இதுதான் கடைசி வாய்ப்பு என்றும் இணைக்க தவறினால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்க தவறினால் வருமான வரி செலுத்துதல் மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது என்றும் அதிகப்படியான TDS, TCS பிடித்தம், 15G படிவங்கள் நிராகரிப்பு மற்றும் வங்கி சேவை நிறுத்தம் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். அதே சமயம் உங்களுடைய பான் கார்டு எண்ணை எப்போது வேண்டுமானாலும் உடனடியாக மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும். அதாவது காலதாமதம் கட்டணம் செலுத்தி ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.

   

இதனிடையே உங்களுடைய பான் கார்டு ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே எளிதில் அறிந்து கொள்ளலாம்.

   

பான் கார்டு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முதலில் வருமான வரித் துறையின் இணையதளமான incometax.gov.in-க்கு செல்ல வேண்டும்.

 

இப்போது ‘லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும், ஒரு புதிய டிஸ்பிளே திறக்கும்.

அதில் நீங்கள் ‘வியூ லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் ‘ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் திரையில் ஒரு செய்தி தோன்றும், இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் விவரங்களைப் பூர்த்தி செய்து இணைக்கலாம்.