#image_title
தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் சக்கைப் போடு கொண்டிருக்க, அவர் இயக்கத்தில் நடிக்க எத்தனையோ முன்னணி நடிகர்கள் ஆர்வமாக இருந்துள்ளார்கள். ஆனால் தன்னுடைய அடுத்தபடத்தில் சுதாகர், ராதிகா என புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அந்த படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.
முதலில் கிழக்கே போகும் ரயில் படத்துக்காக அவர் ராதிகா தேர்வு செய்திருக்கவில்லை. ரயில் படத்திற்காக மேட்டுப்பாளையத்தில் ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு படக்குழுவினர் 78 பேருடன் அங்கே தங்கியிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்த நடிகை ஷூட்டிங்குக்கு வரவில்லை.
உடனே சென்னை திரும்பிய பாரதிராஜா எப்படியாவது ஹீரோயினை பிடிக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்த போது ஒரு நடன இயக்குநரிடம் இருந்த ஒரு ஆல்பத்தில் ராதிகாவைப் பார்த்ததும் அவருக்கு மின்னல் அடித்துள்ளது. உடனே ராதிகா வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் அம்மாவிடம் அனுமதி பெற்று ராதிகாவுக்கு பாவாடை தாவணி அணிந்து சில ஆங்கிள்களில் அவரை நடிக்க சொல்லி பார்த்து ஓகே சொல்லியுள்ளார்.
அதன் பின்னர் நடன இயக்குனர் புலியூர் சரோஜாவை வைத்து நடன அசைவுகளையும், சினிமா நளினங்களையும் சோதித்துப் பார்த்த பின்னர் அவருக்கு முழு திருப்தி. ஆனால் அப்போது வரை ராதிகா நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் என்பது தெரியவில்லையாம். ராதிகாவும் தான் எம் ஆர் ராதாவின் மகள் என்று சொல்லவில்லையாம்.
இப்படி அறிமுகப்படுத்திய ராதிகா முதல் படத்திலேயே நடிப்பில் கலக்கியதோடு, இன்று வரை சினிமா, சின்னத்திரை என தொடர்ந்து இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…