திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி சசிகலா, தனது இரண்டாவது பிரசவத்தை மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இயற்கை முறையில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி அவருக்கு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு சசிகலாவுக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட சசிகலாவை குடும்பத்தினர் உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டும் நிலைமை சீராகாததால், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் ஊத்துக்குளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட மருந்தக ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், சசிகலாவின் கணவர் கார்த்திக் மீது கொலையாகாத மரணம் விளைவித்தல் மற்றும் பிரசவத்தை மறைத்து தனிப்பட்ட முறையில் கையாளுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டிலேயே பிரசவம் பார்க்க தூண்டியது யார், மருத்துவ ஆலோசனை ஏதேனும் பெறப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…