“என் புருஷன் எனக்கு மட்டும்தான்னு ஆசைப்பட்டான்”.. பார்த்திபனுடன் விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை சீதா..

By Sumathi

Updated on:

நடிகை சீதா, கடந்த 1980 -90களில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராமராஜன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். ஆண்பாவம் படத்தில், பாக்யராஜின் சிஷ்யன் பாண்டியராஜன் தான் இவரை அறிமுகப்படுத்தினார். பாக்யராஜின் மற்றொரு சிஷ்யன் பார்த்திபன், புதிய பாதை படத்தில் சீதாவுடன் நடித்து, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராமன் – சீதை போல வாழ்ந்த இவர்கள் ஒரு கட்டத்தில் திடீரென விவகாரத்து செய்து பிரிந்தது, ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் சினிமா துறையினருக்கே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 Actress Sita

   

இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகை சீதா கூறியதாவது, நான் நிறைய எதிர்பார்ப்புகளோடு இருந்தவள்தான். ஆனால், அந்த காலகட்டத்தில் உலகம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சராசரி பெண்ணாக, மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்தேன். ஆஸ்தி, அந்தஸ்து என்று எதுவும் எதிர்பார்க்காத சாதாரணமானவளாக இருந்தேன். ஒரு படத்தில், சுகாசினி என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என்று பாடுவாரே, அப்படிதான் என் எதிர்பார்ப்பு என்பது இருந்தது. அப்படிப்பட்ட ஒரு அன்பைதான் பார்த்திபனிடம் எதிர்பார்த்தேன். ஆனால், அப்படிப்பட்ட ஒரு அன்பு எனக்கு கிடைக்கவில்லை.

சினிமா துறை சார்ந்து மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற குடும்ப பாதிப்புகள் இருக்கிறது. ஆனால், சினிமா நடிகர், நடிகைகள் பிரபலம் என்பதால் வெளியே தெரிகிறது. என்னை பொருத்தவரை கணவன், மனைவி எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்கள் ஒரு இடைவௌி வேண்டும். மரியாதை வேண்டும். புரிதல் வேண்டும்.

 Actress Sita

குறிப்பாக பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். வேலைக்கு சென்று பெண்கள் சம்பாதித்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும். திருமணம் மிக அவசியம். அதே வேளையில் கணவன் மனைவிக்குள் ஒரு இடைவெளி இருப்பதுதான் அன்பை அதிகப்படுத்தும், சண்டைகளை தடுக்கும் என்று கூறி இருக்கிறார் நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி நடிகை சீதா.

author avatar
Sumathi